Friday, July 29, 2011

மாப்பிள்ளை விநாயகர்




மதுரைல எப்பவும் இரண்டு வகையான இங்கிலீஷ் படம் வரும்.ஒன்னு நல்ல படங்கள் இன்னொன்னு பரங்கிமலை ஜோதி வகையறா.அதுல நல்ல படங்கள் ஆரம்ப காலத்தில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள ரீகல் தியேட்டர்ல வந்துச்சு.அப்புறம் காலபோக்கில் அதை லைப்ரரியா மாத்திட்டாங்க. அப்புறம் காளவாசல்ல மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் வந்துச்சு.அதுல முத படம் கமல் நடிச்ச விரதம்  படம்.அதுக்கப்புறம் ஒன் அண்ட் ஒன்லி இங்கிலீஷ் படம் தான்.
டீச்சர்னா பொம்பளை சார்னா ஆம்பளை இது தான் அப்ப எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷ்.இந்த லட்சனத்துல முக்காவாசி மாப்பிள்ளை விநாயகர்ல இங்கிலீஷ் படத்துக்கு போவேன். ஆக்க்ஷன் படம்னா பெரிசா ஒன்னும் கஷ்டம் இல்ல படம் முழுக்க சண்டை தான்.வெறும் டயலாக் உள்ள படம்னா செத்தான் எதிரி.எல்லாரும் சிரிக்கும் போது சிரிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திருவேன்.அப்புறம் காலேஜ் போக ஆரம்பிச்ச பிறகு டயலாக்  மட்டும் உள்ள படம் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது.  பி.எஸ்.சி. முடிச்சி ஒரு வருஷம் சும்மா இருந்தப்போ மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் ஓனர் பையன் அம்பு ப்ரெண்டானான்.  அதுக்கப்புறம் ஒரு படம் விடுறதில்ல.  தியேட்டர்ல ஆப்ரேட்டர் ரும் பக்கத்துல ஒரு பாக்ஸ் இருக்கும். தியேட்டர் ஹவுஸ்புல் ஆனா பாக்ஸ்ல உக்கார்ந்து படம் பார்ப்போம்.  இப்பெல்லாம் மாப்பிள்ளை விநாயகரில் தமிழ் படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகுது.
ஓரளவுக்கு இங்கிலீஷ் புரிய இந்த தியேட்டர்ல பார்த்த இங்கிலீஷ் படங்களும் ஒரு காரணம்.அதோட போனஸா 'F ***' மாதிரி பல நல்ல வார்த்தைகள் கத்துகிட்டதும் இங்கிலீஷ் படம் பாத்துதான்.

இன்னொரு முக்கியமான விஷயம் மாப்பிள்ளை விநாயகரில் முட்டை போண்டா சூப்பரா இருக்கும்.







Friday, July 22, 2011

என்னத்த சொல்ல

சன் டி.வி ல புதுசா ஒரு சேனல் மூவி கிளப்  விளம்பரம் இல்லாம சினிமா பாக்கலாம்.
அப்ப கே.டி வி ? 
 
 
கருணாநிதி சுறுசுறுப்பாக உழைக்கிறார்: தி.மு.க. தலைவர் பதவியில் மாற்றம் தேவை இல்லை; மு.க.அழகிரி பேட்டி
- அப்ப அரசியல்லே  ரிடைர்மென்ட் கிடையாதா ?
 
 
கருவின் குற்றம் கவிதை எழுதுனதுக்கு நாஞ்சில் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதை எதிர்த்த வை.கோ கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இது எல்லாம் பல வருஷம் முன்னாடி.
நில மோசடி வழக்கில் கைது செய்யபட்டர்வகளுக்கு வக்கீல் அணி உதவி செய்யும்.
--இது தாண்டா அரசியல்!!

Thursday, July 21, 2011

வீடு

உங்க வீட்டு முகவரியை கேட்டால் என்ன சொல்வீர்கள்?  இதில் இளங்கோ சற்று வித்தியாசமான ஆள் சற்றும் யோசிக்காமல் 15 வருடங்களுக்கு முன்னால் கைவிட்டுபோன சொந்தவீட்டு முகவரியை தான் கூறுவான்.  அதன் பின் பல வாடகை வீடுகளுக்கு மாறி இருந்தாலும் அவன் இறக்கும் வரை இந்த பழக்கம் மாறவில்லை. கவிஞர் மீராவின் கவிதை ஒன்றில் விட்டுச்சென்ற வீட்டின் அடுப்படியில் அந்த வீட்டுப்பெண்களின் விசும்பல் கேட்கும் என்று கூறியிருப்பார்.சொந்தவீட்டை விற்று வாடகை வீட்டில் குடியிருப்பது கொடியது.

நடுத்தர வர்க்கத்திற்கு சொந்த வீடு என்பது வாழ்க்கை இலட்சியம்.  வாழ்வின் பெரும் பகுதியை இந்த போராட்டத்தில் கழித்தவர் அநேகம் பேர்.  விரும்பி கட்டிய வீட்டில் வாழ்வதற்கு முன் இறந்தவரும் உண்டு.
பாலுமகேந்திராவின் வீடு படம் பார்க்க வேண்டும்.  கடந்த ஒரு வருடமாக டிவிடி தேடிக்கிட்டு இருக்கேன்.

Wednesday, July 20, 2011

அன்பே ஆருயிரே

போன வாரம் பெங்களுர் நடராஜா தியெட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படம் ரீலிஸாச்சு புதுப்படத்துக்குள்ளே கட்அவுட், தோரணம் கூடுதலா பிரியாணியோட.நம்மூரு காரங்களுக்கு சினிமா இரத்தத்தோடு கலந்த ஒன்று.
எங்க அம்மாவோட அப்பா சிவாஜி படத்துக்கு மட்டும்தான் கூட்டிட்டு போவாராம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எம்.ஜி.ஆர் படம் பார்த்தாங்களாம் !!!.


கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கொடுக்கிற முதல் சேலை
மாதிரி பார்க்கிற முதல் படம் ரொம்ப சென்டிமெண்டானது.
எங்க அம்மா முதல்ல பார்த்த படம் பூக்காரி
எங்க சித்தி பார்த்த படம் இணைந்த கைகள்
என் பொண்டாட்டி செலக்ஷன் அன்பே ஆருயிரே
என் மச்சினன் பார்த்த படம் தாம்தும் இப்ப லேட்டஸ்ட்டாக கல்யாணமான என் சகலை போன படம் கோ.

 




Tuesday, July 19, 2011

ஆல் இன் ஆல் அழகுராஜா

எங்க வீட்டுல நான் நாலாவது படிக்கும் போது T .V வாங்கினோம்.அதுல கிரிக்கெட் அறிமுகமாகி கிட்டி,குண்டு,பம்பரம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு அரசரடி கிரௌண்ட் ,U .C ஸ்கூல் கிரௌன்ட்ல கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சேன்.அதுக்கப்பறம் சுப்புராம் அத்தான் கிட்ட அழுது அடம்பிடிச்சு ஒருபேட் வாங்கினேன்.எங்க தெரு டீம்ல,பேட் புண்ணியத்துல ஐயா தான் லாஸ்ட் பேட்ஸ் மேன்.இந்த கதை ஒரு மூணு நாலு வருஷம் போச்சு.
அதுக்கபுறம் லேபர் ஸ்கூல ஏழாம் கிளாஸ் படிக்கும்போது ஹாக்கி டீம்ல என் அண்ணன் இருந்ததாலும்,டீம்ல ஆள் இல்லாத காரணத்தாலும் அடியேன் சேர்த்துக்கொள்ளபட்டேன்!.
அதுக்கபுறம் எட்டாம் கிளாஸ்ல கபடி அப்படியே scouts ,N .C .C அப்படின்னு ஒரு வருஷம் படம் ஒடிச்சு.
அடுத்த வருஷம் கிளப்ல நீச்சல் கத்துகிட்டு மாவட்ட நீச்சல் போட்டில தோற்ற பிறகு அதை விட்டுடேன்.
அப்புறம் T .வ ல  டென்னிஸ் பார்த்து ஒரு இவான் லென்டில் இல்ல போரிஸ் பெக்கர் ஆகணும்னு முடிவுபண்ணி டென்னிஸ் கோச்சிங் போக ஆரம்பிச்சேன்.அது சும்மா ஒரு வருஷம் ஒடிச்சு.என்னைக்கு மாஸ்டர் valley  சொல்லிகொடுக்க ஆரம்பிச்சாரோ அதோட அதுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டேன். பாடுன வாயும் ஆடுன காலும் சும்மா இருக்காது பாருங்க +2  லீவுல billards ,shuttlecock விளையாடினேன்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
"JACK OF ALL BUT KING OF NONE " .அதுக்கு நான் ஒரு வாழும் உதாரணம்.
சொல்ல மறந்துட்டேனே இப்ப மூணு வருசத்துக்கு ஒரு கம்பெனி மாறிட்டு இருக்கேன். தூத்துக்குடி,சென்னை,ஹைதராபாத் ஒரு சுத்து சுத்தி இப்ப பெங்களூர். அடுத்து எங்கே ..தெரியலே .

ராமையா பிறந்தது திருநெல்வேலி தச்சநல்லூர் கிராமம்.வீட்டில் நாலாவது பிள்ளை.அவருக்கு ஐந்து வயது இருக்கும்போது அவருடைய அப்பா இறந்துவிட குடும்பம் மதுரைக்கு பிழைக்க வந்தது.
ராமையா மதுரை ஹார்வி மில்லில் சிறிது நாள் வேலைபார்த்தார்.
பின்னர் மேலபொன்னகரம் 6 வது தெருமுக்கில் ஒரு பெட்டி கடை ஓட்டினார்.அவருக்கு மொத்தம் மூணு பசங்க அதுல்ல மூணாவது புள்ள பேரு "ஜெகநாதன்" ரொம்ப சின்ன வயசுள்ள அவரு இறந்து போக.
பாசக்கார அண்ணனங்க அவங்க (அவிங்க) மூத்த பிள்ளைகளுக்கு ஜெகநாதன் என்று பெயர் இட்டனர்.


ஒண்ணுமில்ல  நம்ம ரித்தீஷ்,பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் எல்லாம் ஹீரோவா நடிக்கும் போது நாம மட்டும் எழுத கூடாதா?.
அதான் கழுதை ஆரம்பிச்சாச்சு.இனிமே எழுதி தள்ளிடனும்.

                                                                                                ரித்தீஷ்
                                                                                    பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்